திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1346 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே கண் வளர்ந்து அருளினவன்) 9 | குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே –4-10-9 | பதவுரை Show / Hideஅமரர், Amarar - பிரமன் முதலிய தேவர்கள் (- (ஆழியான் அமர்ந்து உறை கோயில்–) (வெள்ளியங் குடியதுவே)) குடி குடி ஆக கூடி நின்று, Kudi Kudi Aaga Koodi Nindru - குடும்பம் குடும்பமாகச் சேர்ந்திருந்து குணங்களே பிதற்றி நின்று ஏத்த, Gunangalai Pithattri Nindru Aetha - (தனது) திருக்கல்யாண குணங்களையே சொல்லிக் கொண்டு துதிக்கப்பெற்ற அடியவர்க்கு அருளி, Adiyavarkku Aruli - அடியார் திறத்தில் கிருபை பண்ணிக்கொண்டு அரவு அணை துயின்ற, Aravu Anai Thuyindra - சேஷசயனத்தில் திருக்கண் வளர்ந்தருள்கின்ற கடி உடை கமலம், Kadi Udai Kamalam - பரிமளத்தை யுடைத்தான தாமரைப் பூக்கள் அடியிடை மலர, Adiyidai Malara - (கரும்புகளின் உடையவும் செந்நெற்பயிர்களின் உடையவும்) அடி நிலங்ககைளிலே மலரப் பெற்றதும், கரும்பொடு பெரு செந்நெல் அசைய, Karumpodu Peru Chennel Asaiya - கரும்புகளும் பெருத்த செந்நெற் கதிர்களும் அசைந்து கொண்டிருக்கப் பெற்றதும் வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும், Vadivu Udai Annan Pedaiyodum Serum - அழகிய வடிவையுடைய அன்னப் பறவைகள் பேடையோடு கூடப்பெற்றதுமான வயல், Vayal - கழனிகளையுடைய |