திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1350 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1350பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம் பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம்) 3
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும் பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3
பதவுரை Show / Hide
மேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீய, Meva Arakkar Then Ilankai Vendan Veeya - பகையே இயற்கையான ராக்ஷஸர்கள் நிறைந்த தென்னிலங்காபுரிக்கு அரசனான இராவணன் முடியும்படி (- (புள்ளம் பூதங்குடி –.))
சரம் துரந்த, Charam Durandha - அம்புகளைப் பிரயோகித்தவனும்
மா வாய் பிளந்து, Maa Vaai Pilanthu - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னு மசுரனுடைய வாயைக் கீண்டொழித்தவனும்
மல் அடர்த்து, Mal Adarthu - மல்லர்களை வென்றவனும்
மருதம் சாய்த்த, Marudham Saayththa - இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவனுமான
மாலது, Maaladhu - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது;-
கா ஆர் தெங்கின் பழம் வீழ, Kaa Aar Thengin Pazham Veela - தோட்டங்களில் நிறைந்திருக்கிற தென்னை மரங்களினின்றும் தேங்காய்கள் (இற்று) கீழே விழுந்ததனாலே
கயல்கள் பாய, Kayalgal Paaya - மீன்களானவை (அஞ்சி) துள்ளி அப்பால் ஓடப் பெற்றதும்
குருகு இரியும், Kurugu Iridum - நாரைகளானவை சிதறியோடப் பெற்றதும்
பூ ஆர் கழனி எழில் ஆரும், Poo Aar Kazhani Ezhil Aarum - தாமரை முதலிய பூக்கள் நிறைந்த கழனிகளினால் அழகு மிக்கதுமான