திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1350 | பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம் பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம்) 3 | மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3 | பதவுரை Show / Hideமேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீய, Meva Arakkar Then Ilankai Vendan Veeya - பகையே இயற்கையான ராக்ஷஸர்கள் நிறைந்த தென்னிலங்காபுரிக்கு அரசனான இராவணன் முடியும்படி (- (புள்ளம் பூதங்குடி –.)) சரம் துரந்த, Charam Durandha - அம்புகளைப் பிரயோகித்தவனும் மா வாய் பிளந்து, Maa Vaai Pilanthu - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னு மசுரனுடைய வாயைக் கீண்டொழித்தவனும் மல் அடர்த்து, Mal Adarthu - மல்லர்களை வென்றவனும் மருதம் சாய்த்த, Marudham Saayththa - இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவனுமான மாலது, Maaladhu - எம்பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாவது;- கா ஆர் தெங்கின் பழம் வீழ, Kaa Aar Thengin Pazham Veela - தோட்டங்களில் நிறைந்திருக்கிற தென்னை மரங்களினின்றும் தேங்காய்கள் (இற்று) கீழே விழுந்ததனாலே கயல்கள் பாய, Kayalgal Paaya - மீன்களானவை (அஞ்சி) துள்ளி அப்பால் ஓடப் பெற்றதும் குருகு இரியும், Kurugu Iridum - நாரைகளானவை சிதறியோடப் பெற்றதும் பூ ஆர் கழனி எழில் ஆரும், Poo Aar Kazhani Ezhil Aarum - தாமரை முதலிய பூக்கள் நிறைந்த கழனிகளினால் அழகு மிக்கதுமான |