திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1357 | பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ராமோ ராமோ ராம -என்கிற படியே இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு – ஸ்ரீ ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து – நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து கொடை இருப்பது – இத் திரு மொழியை உபகரித்தவர் இறே – சொல் தான் ஈரைந்து இவை பாட-இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரச்யதைக்கு- இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது) 10 | கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10 | பதவுரை Show / Hideகன்று ஆ மறித்து, Kandru Aa Mariththu - கன்றுகளோடு கூடின பசுக்களை மடக்கி மேய்த்தவனும் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற, Kaaliyan Than Chennai Nadunga Nadam Payindra - காளிய நாகத்தின் தலையிலே (அந்த நாகம்) நடுங்கும்படி கூத்தாடினவனும் பொன் தாமரையாள் தன் கேள்வன், Pon Thamaraiyal Than Kelvan - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனுமான பெருமானுடைய புள்ளம்பூதங்குடி தன் மேல், Pullampoothangudi Than Mel - திருப்புள்ளம் பூதங்குடி விஷயமாக, கற்றார் பரவும், –, Kattrar Paravum - கற்றவர்களால் கொண்டாடப்படுபவரும் மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் கார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - காளமேகம்போன்ற உதாரருமான கலிகன்றி, Kalikanri - கலியனுடைய சொல் இவை ஈர் ஐந்து பாட, Sol Ivai Eer Aindhu Paada - ஸ்ரீஸூக்தியாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பாடப்பெற்றால் துயர் சோர நில்லா, Thuyar Soora Nillaa - துன்பங்கள் (இவ்வாத்மா) சோர்வு அடையும்படி தங்கியிருக்கமாட்டா |