திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1358 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும் இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே-ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது – சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும் அத்தை யமுக்கி இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி வாரா நிற்கும் யாய்த்து) 1 | தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1 | பதவுரை Show / Hideதம் பெருமை தாம் அறியார், Tham Perumai Thaam Ariyaar - தமது பெருமேன்மையைத் தாமும் அறியாதவரும் வேந்தர்க்கு தூது ஆய வேந்தர், Vendarukku Thoodu Aaya Vendar - (பாண்டவ) மன்னர்கட்கு தூதனாய்ச் சென்றவருமான தேவாதி தேவருடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்) காந்தன் விரல் மென் கலை நல் மடவார், Kanthan Viral Men Kalai Nal Madavaar - செங்காந்தன் மலர்போன்ற விரல்களையுடையவரும் அழகிய ஆடையணிந்தவர்களுமான நல்ல பெண்டுகளினுடைய கூந்தல் கமழும், Koondhal Kamazhum - கூந்தல்களானவை பரிமளம் வீசப்பெற்ற கூடலூர் –, Koodalur - திருக்கூடலூராகும். |