திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1358 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1358பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும் இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே-ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது – சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும் அத்தை யமுக்கி இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி வாரா நிற்கும் யாய்த்து) 1
தாந்தம் பெருமை அறியார் தூது வேந்தர்க்காய வேந்தரூர் போல் காந்தள் விரல மென்கலை நன் மடவார் கூந்தல் கமழும் கூடலூரே –5-2-1
பதவுரை Show / Hide
தம் பெருமை தாம் அறியார், Tham Perumai Thaam Ariyaar - தமது பெருமேன்மையைத் தாமும் அறியாதவரும்
வேந்தர்க்கு தூது ஆய வேந்தர், Vendarukku Thoodu Aaya Vendar - (பாண்டவ) மன்னர்கட்கு தூதனாய்ச் சென்றவருமான தேவாதி தேவருடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
காந்தன் விரல் மென் கலை நல் மடவார், Kanthan Viral Men Kalai Nal Madavaar - செங்காந்தன் மலர்போன்ற விரல்களையுடையவரும் அழகிய ஆடையணிந்தவர்களுமான நல்ல பெண்டுகளினுடைய
கூந்தல் கமழும், Koondhal Kamazhum - கூந்தல்களானவை பரிமளம் வீசப்பெற்ற
கூடலூர் –, Koodalur - திருக்கூடலூராகும்.