திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1361 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1361பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற பூமிப் பரப்படைய நீர் ஏற்று அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட என் குல நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம்) 4
கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் போல் சேறு ஏர் உழவர் கோதைப் போதூண் கோல் தேன் முரலும் கூடலூரே –5-2-4
பதவுரை Show / Hide
கூறு ஏர் உருவின், Koora Aer Uruvin - கொண்டாடுவதற்குத் தகுந்த ரூபத்தையுடைய (- (கூடலூர்))
குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாகி
நிலம் நீரேற்றான், Nilam Neeretraan - பூமிதானம் வாங்கிக்கொண்ட
எந்தை பெருமான் ஊர், Endhai Perumaan Oor - எம்பெருமானுடைய திவ்யதேசம்;-
சேறு, Seru - சேறுகளிலே
ஏர் உழவர், Aer Uzhuvar - ஏர்கட்டி உழுகின்றவர்களது
கோதை, Kodai - மயிர்முடியிலே வைக்கப்பட்ட
போது, Podhu - பூக்களிலுள்ள தேனை
ஊண், Oon - உணவாகவுடைய
கோல் தேன், Kol Then - சோலைவண்டுகள்
முரலும், Muralum - இசைபாடப்பெற்ற