திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1362 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது தன் உடம்பின் மின்னாகக் கொண்டு அதுக்கு அனந்தரமான முழக்கத்தை முழங்கா நிற்கும் ஆய்த்து- நீர் விழுகிற போது இங்கே கண்டு-கார்ய காலத்தில் அங்கே கண்ட ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும்) 5 | தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகளூர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக்
கொண்டல் அதிரும் கூடலூரே –5-2-5 | பதவுரை Show / Hideதொண்டர் பரவ, Thondar Parava - ஆச்ரிதர்கள் துதிக்கும்படியாக (- (கூடலூர்.)) சுடர் சென்று அணவ, Sudar Sendru Anava - (திருமேனி) ஸூர்ய மண்டலத்தளவும் போய் ஸ்பர்சிக்க வளர்ந்து அண்டத்து அமரும் அடிகள், Andaththu Amarum Adigal - ஆகாசாவகாசமுள்ள இடமெல்லாம் வியாபித்த ஸ்வாமியினுடைய ஊர், Oor - திவ்யதேசம்; வண்டல் அலையுள், Vandal Alaiyul - வண்டல் பாய்ந்திருப்பதாய் அலைகளையுடைத்தான நீர்நிலங்களிலே கெண்டை மிளிர, Kendai Milira - கெண்டை மீன்கள் (தமது ஒளியாலே) மின்னாநிற்க (அதைக் கண்டு) கொண்டல் அதிரும், Kondal Athirum - மேகங்களானவை முழக்கம் செய்யப் பெற்ற |