திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1365 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருநீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன் அத்தேசமும் தனக்கு உண்டாய் இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம்) 8 | கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்
மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே –5-2-8 | பதவுரை Show / Hideகலை, Kalai - ஆண்மான்கள் (- (கூடலூர்)) பிணையோடு, Pinaiyodu - பெண்மான்களோடு அணை வாழும், Anai Vazhume - சேர்ந்து வாழும்படியான திருநீர்மலை, Thiruneermalai - திருநீர்மலையிலே வாழ், Vaazh - வாழ்கின்ற எந்தை, Endhai - எம்பெருமான் மருவும், Maruvum - பொருந்திவாழப்பெற்ற ஊர், Oor - திவ்யதேசம்;- இலை தாழ், Ilai Thazh - மட்டைகள் தழைத்திருக்கிற தெங்கின் மேல் நின்ற, Thengin Mel Nindra - தென்னைமரங்களின் மேலிருக்கிற இளநீர் குலை, Ilanir Kulai - இளநீர்க் குலைகள் தாழ், Thazh - (தம்மேல்) தாழ்ந்திருக்கப்பெற்ற கடங்கின், Kadangin - நீர்நிலைகளையுடைய |