திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1367 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காவி போலேயும் பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கூடலூர்) 10 | காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10 | பதவுரை Show / Hideகாலி பெரு நீர் வண்ணன் கண்ணன், Kaali Peru Neer Vannan Kannan - கருநெய்தற் பூப்போலவும் கடல்போலவும் நிறமுடையனான எம்பெருமான் மேவி திகழும் கூடலூர் மேல், Mevi Thigazhum Koodalur Mel - பொருந்தி விளங்கப்பெற்ற கூடலூர் விஷயமாக கலியன், Kaliyan - திருமங்கைமன்னன் கோவை தமிழால் சொன்ன, Kovai Tamizhal Sonna - ஒழுங்கான தமிழினால் அருளிச் செய்த பாவை, Paavai - இப்பாசுரங்களை பாட, Paada - பாடவே பாவம் போம், Paavam Pom - பாவங்கள் தொலைந்துபோம் |