திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1368 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி ரஷித்த அருமை வேணுமோ என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார் முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ) 1 | வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே –5-3-1 | பதவுரை Show / Hideதென்றல், Thendral - தென்றல் காற்றானது மன்றில் மாம் பொழில் நுழைதந்து, Manril Maam Pozhil Nuzhaithanthu - இடைவெளிகளிலே யுள்ள மாந்தோப்புகளிலே நுழைந்தும் மல்லிகை போது மௌவலின் போது அலர்த்தி, Mallikai Podhu Maulavin Podhu Alarthi - மல்லிகைப் பூக்களையும் முல்லைப் பூக்களையும் மலரச்செய்தும் மா மணம் கமழ்தர வரு, Maa Manam Kamazhdhara Varu - மிக்க பரிமளம் வீச வந்துலாவப் பெற்ற திரு வெள்ளறை, Thiru Vellarai - திருவெள்ளறையிலே நின்றானே, Nindraane - நின்றருளும் பெருமானே!, முன், Mun - முன்பொருகால் வென்றி மா மழு ஏந்தி, Vendri Maa Mazhu Aendhi - ஜயசீலமான பெரிய கோடாலிப் படையைத் தரித்து மண் மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ, Man Misai Mannarai Moovezhukaal Konra Deva - பூமியிலுள்ள அரசர்களை இருபத்தொரு தலைமுறை கொலைசெய்த தேவனே! நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரி, Nin Kurai Kazhal Thozhuthavathu Oru Vagai Enakku Arulpuri - உன்னுடைய ஆபரண வொலிபொருந்திய திருவடிகளை வணங்கப் பெறும் ஓருபாயத்தை அடியேனுக்கு அருளவேணும். |