திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1373 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மந்தரத்தை தரிக்க வல்ல ஸ்ரீ ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து அவர்களை ரஷித்து அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –நின்னடிமையை யருள் எனக்கு) 6 | பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
அங்குஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
தங்கு பேடை யோடூடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே –5-3-6 | பதவுரை Show / Hideதங்கு பேடையோடு ஊடிய மதுகரம், Thangu Pedaivodu Oodiya Mathukaram - பூவிலே தங்கியிருந்த பெண் வண்டோடு பிரணய கலஹங்கொண்ட ஆண் வண்டு (- (திருவெள்ளறை, நின்றானே!;) (அவர்களுக்கு இரங்கி)) தையலார் குழல் அணைவான், Thayalar Kuzhal Anaivaan - ஸ்த்ரிகளினுடைய கூந்தல்களைச் சென்று கிட்டி அங்கே மறைந்திருக்கைக்காக, திங்கள் தோய் சென்னி மாடம் சென்ற அணை, Thingal Thoi Senni Maadam Senra Anai - சந்திரமண்டலத்திலே படிந்திருக்கிற சிகரங்களையுடைய மாளிகைகளை சென்று சேர்ந்திருக்கப்பெற்ற பொங்கு, Pongu - விளங்குகின்ற நீள் முடி, Neel Mudi - நீண்ட கிரீடத்தை யுடையரான அமரர்கள், Amarar - தேவர்கள் தொழுது எழ, Thozhudhu Ezha - (தன்னை) வணங்கி யாச்ரயிக்க அமுதினை கொடுத்து அளிப்பான், Amuthinai Koduthu Alippaan - அமிருதத்தைத் தந்தருள்வதற்காக அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி, Angu Oru Aamai Adhu Aagiya Aadhi - அப்போது விலக்ஷணமான கூர்மமாகத் திருவவதரித்த காரணபூதனே! நின் அடிமையை எனக்கு அருள், Nin Adimaiyai Enakku Arul - உனக்கு நான் அடியனாயிருக்கப் பெறுவதை எனக்கு அருளவேணும் |