திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1375 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீரையும் பாலையும் பிரிக்க வல்ல அன்னத்தின் வடிவினைக் கொண்டு தன் படிகளை அடங்கலும் பேச வற்றை இருக்கிற வேதத்தை உண்டாக்கினவனே-என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும்) 8 | முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8 | பதவுரை Show / Hideமன்னு கேதகை சூதகம் என்ற இவை, Mannu Kethakai Soodhagam Endra Ivai - மாறாதே பூத்திருக்கிற தாழைகளென்ன மாமரங்களென்ன இத்யாதி வ்ருக்ஷங்களை யுடைத்தான (- (திருவெள்ளறை, நின்றானே!;) (எனக்கு அருள்புரி–.)) வனத்து இடை, Vanaththu Idai - சோலைகளின் நடுவே சுரும்பு இனங்கள், Surumbu Inangal - ‘சுரும்பு’ என்னுஞ்சாதி வண்டுகளின் கூட்டம் தேன்ன என்ன, Thenna Enna - ‘தென்னதென்ன’ என்றுபாட, வண்டு, Vandu - (சாதாரண) வண்டுகளானவை இன் இசை முரல், In Isai Murali - இனிமையான இசைப் பாட்டுக்களைப் பாடாநிற்கப்பெற்ற முன் இ ஏழ் உலகு உணர்வு இன்றி, Mun I Ezh Ulagu Unarvu Inri - முன்பொருகால் இவ்வுலகங்களெல்லாம் அறிவு கெட்டு இருள் மிக, Irul Mika - அஜ்ஞாநாந்தகாரம் மேலிட்ட வளவிலே உம்பர்கள் தொழுது ஏத்த, Umbarhal Thozhudhu Aetha - தேவர்கள் வணங்கித் துதிக்க அன்று அன்னம் ஆகி அரு மறை பயந்தவனே, Anru Annan Aagi Aru Marai Payandavaney - அப்போது ஹம்ஸரூபியாகி அருமையான வேதங்களை ஸம்பாதித்துக் கொடுத்தவனே! |