திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1376 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1376பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால் தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து – இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி போராதோ என்னுடைய ஆஸ்ரயணம்) 9
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும் பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித் தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே –5-3-9
பதவுரை Show / Hide
ஓங்கு பிண்டியின் செம்மலர், Ongu Pindiyin Semmalar - உயர்ந்து வளர்கின்ற அசோக மரத்தினுடைய சிவந்த புஷ்பங்களின் மேலே (- (திருவெள்ளறை, நின்றானே!–;))
வண்டு ஏறி உழிதர, Vandu Eri Uzithara - வண்டுகள் ஏறி ஸஞ்சரிக்க,
தீம் குயில் மா ஏறி, Theem Kuyil Maa Eri - மதுரஸ்வரம் உள்ள குயில்கள் மாமரங்களின் மேலேறிநின்று
மிழற்றும், Mizhatrum - கூவுதல் செய்யப்பெற்ற
படப்பை, Padappai - கொடித் தோட்டங்களை யுடைத்தான
மாவலி, Mavali - மஹாபலியினுடைய
வேள்வியில் சென்று இரந்து, Velviyil Sendru Irandhu - யாகபூமியில் எழுந்தருளி (மூவடிமண்) யாசித்து
ஆங்கு அகல் இடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட, Aangu Akal Idam Muzhudhinaiyum Pankinaal Konda - அப்போதே பூமிப் பரப்பெல்லாவற்றையும் முறைமையினால் ஸ்வாதீனப்படுத்திக்கொண்ட
பரம, Parama - புருஷோத்தமனே!
நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரி, Nin Paninthu Ezhuvein Enakku Arulpuri - உன்னை வணங்கி யெழுகின்ற என் விஷயத்திலே க்ருபை பண்ணியருள்