திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1380 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன் வர்த்திக்கிற தேசம்) 3 | பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3 | பதவுரை Show / Hideவண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி, Vandu Paadum Madhu Vaar Punal Vandu Izhi Kaviri - வண்டுகள் பாடப்பெற்ற தென் ஒழுகுகின்ற தீர்த்தமானது வந்து பிரவஹிக்கின்ற திருக்காவேரியினாலும் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்)) அண்டம் நாறும் பொழில், Andam Naarum Pozhil - ஆகாச மெங்கும் பரிமளிக்கின்ற சோலைகளாலும் சூழ்ந்து அழகு ஆர், Sozhndhu Azhagu Ar - சூழப்பட்டு அழகு பொருந்தியதான பண்டு, Pandhu - முன்பொருகால் இ வையம் அளப்பான் சென்று –, I Vaiyam Alappaan Sendru - இப்பூமியை அளந்து வசப்படுத்திக் கொள்வதற்காகப் போய் மாவலி கையில், Maavali Kaiyil - மஹாபலியினுடை கையில் நின்றும் தாந ஜலத்தை ஆழி தடம் கை கொண்ட, Aazhi Thadam Kai Konda - திருவாழியை யேந்தவல்ல தடக்கையாலே ஏற்றுக்கொண்ட குறளன், Kuralan - வாமநமூர்த்தியினது |