திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1380 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1380பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன் வர்த்திக்கிற தேசம்) 3
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால் வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3
பதவுரை Show / Hide
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி, Vandu Paadum Madhu Vaar Punal Vandu Izhi Kaviri - வண்டுகள் பாடப்பெற்ற தென் ஒழுகுகின்ற தீர்த்தமானது வந்து பிரவஹிக்கின்ற திருக்காவேரியினாலும் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
அண்டம் நாறும் பொழில், Andam Naarum Pozhil - ஆகாச மெங்கும் பரிமளிக்கின்ற சோலைகளாலும்
சூழ்ந்து அழகு ஆர், Sozhndhu Azhagu Ar - சூழப்பட்டு அழகு பொருந்தியதான
பண்டு, Pandhu - முன்பொருகால்
இ வையம் அளப்பான் சென்று –, I Vaiyam Alappaan Sendru - இப்பூமியை அளந்து வசப்படுத்திக் கொள்வதற்காகப் போய்
மாவலி கையில், Maavali Kaiyil - மஹாபலியினுடை கையில் நின்றும் தாந ஜலத்தை
ஆழி தடம் கை கொண்ட, Aazhi Thadam Kai Konda - திருவாழியை யேந்தவல்ல தடக்கையாலே ஏற்றுக்கொண்ட
குறளன், Kuralan - வாமநமூர்த்தியினது