திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1381 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1381பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்) 4
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால் துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4
பதவுரை Show / Hide
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து மன் உச்சி திளைக்கும், Thulaikkai Yaanai Maruppum Akilum Konarnthu Man Ucchi Thilaikkum - துதிக்கையையுடைய யானைகளின் தந்தங்களையும் அகில் மரங்களையும் அடித்துக் கொண்டுவந்து முன்னே தள்ளி லீலாரஸமனுபவிக்கின்ற (- (தென் அரங்கம்) (இடம் எனபர்))
செல்வம் புனல் காவிரி சூழ், Selvam Punal Kaaviri Soozh - திவ்யமான தீர்த்தத்தையுடைய காவேரியினால் சூழப்பட்ட
வெம் போர் விளைத்த விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட, Vem Por Vilaittha Viral Vaal Arakkan Nagar Paazhpada - கடுமையான யுத்தத்தை உண்டாக்கின பலிஷ்டனான வாட்படைவல்லனான இராவணனுடைய நகரமாகிய லங்கை பாழாகும்படியாக
வளைத்த வல்வில் தட கையவனுக்கு, Valaitha Valvil Thada Kaiyavanukku - வளைக்கப்பட்ட வலியவில்லைத் தடக்கையிலே உடையவனான பெருமானுக்கு