திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1382 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1382பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால் குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 5
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால் உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற் செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-5
பதவுரை Show / Hide
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும், Umbra Koonum Ulaku Ezhum Vandu Eendi Vanangum - தேவர்களுக்கு நிர்வாஹகனான பிரமனும் ஸப்த லோகங்களும் கிட்டி திரண்டு வணங்கப்பெற்றதாய் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்))
நல் செம் பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர், Nal Sem Pon Aarum Mathil Soozhndhu Azhagu Aar - நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி கதாலன் வான் புக, Vambu Ulaam Koondhal Mandothari Kathaalan Vaan Puga - வாஸனை உலாவுகின்ற கூந்தலை யுடையளான மந்தோதரிக்குக் கணவனான இராவணன் வீர ஸ்வர்க்கமடையும்படியாக
அம்பு தன்னால் முனிந்த அழகன், Ambu Thannal Munintha Azhagan - பாணங்களினால் சீறிக்கொன்றொழித்த வீரச்ரியையுடையனான இராமபிரானது.