திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1384 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே ஸ்ரீ திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம்) 7 | கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7 | பதவுரை Show / Hideமஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும், Manju Cher Maaligai Needu Akil Pugaiyum - மேகமண்டலத்தை அளாவியிருக்கிற மாளிகைகளிலுண்டான அதிகமான அகிற்புகையும் மா மறையோர் செம் சொல் வேள்வி புயையும் கமழும், Maa Maraiyore Sem Sol Velvi Puyaiyum Kamazhum - சிறந்த வைதிக ப்ராமணர்கள் வேதங்களிற் விதிப்படியே நடத்துகிற யாகங்களிலுண்டான ஹோமதூமமும் (சேர்ந்து) பரிமளிக்கப்பெற்ற தென் அரங்கம், Then Arangam - திருவரங்கமானது, – கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் துஞ்ச, Kanjan Nenjum Kadu Mallarum Sakadhamum Thunja - கம்ஸனுடைய மனமும் கடிய மல்லர்களும் சகடாஸுரனும் தொலையும்படி காலினால் வென்ற, Kaalinaal Vendra - திருவடியாலே வென்றொழித்த உஜ்வலமான திருவாழியையுடைய பெருமான் ரித்யவாஸம் பண்ணுமிடம் என்று சொல்லுவார்கள் |