திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1385 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து ரஷகன் ஆனவன் அவ்வவதார காலங்களிலே பிற் பாடர்க்கும் இழக்க வேண்டாத படி வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்) 8 | ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8 | பதவுரை Show / Hideவானும் மண்ணும் நிறைய புகுந்த ஈண்டி வணங்கும், Vaanum Mannum Niraiya Pugundha Eendi Vanangum - விண்ணுலகத்திலுள்ளாரும் மண்ணுலகத்திலுள்ளாரும் ஏராளமாக வந்து சேர்ந்து ஒன்றாகத்திரண்டு வணங்கப்பெற்றதும், (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்)) நல் தேனும் பாலும் கலந்தன்னவர், Nal Thenum Paalum Kalandannavar - மதுரமான தேனும் பாலும் ஒன்றாகச் சேர்ந்தாற்போலே ஏகரஸராயிருக்கிற பக்தர்கள் சேர், Ser - சேர்ந்திருக்கப்பெற்றதுமான ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய், Eyanam Meen Aamaiyodu Ariyum Siru Kuralum Aay - வராஹமாகவும் மத்ஸ்ய கூர்மமாகவும் நரஸிம்ஹமாகவும் வாமநனாகவும் திருவவதரித்தவனாய் தானும் ஆய, Thaanum Aay - ஸ்ரீராமபிரானாகவும் திருவவதரித்தவனான தரணி தலைவன், Tharani Thalaivan - ஸர்வலோகேச்வரனுடைய |