திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1386 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாகப் போரும்படியான ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள மதிள்களாலே சூழப்பட்ட தர்ஸநீயமான ஸ்ரீ கோயில்) 9 | சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே –5-4-9 | பதவுரை Show / Hideவேயின் முத்தும் மணியும் கொணர்ந்து, Veyin Muthum Maniyum Konarnthu - மூங்கில்களில் நின்று முதிர்ந்த முத்துக்களையும் ரத்னங்களையும் தள்ளிகொண்டுவந்து (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்)) ஆர் புனல் காவிரி, Aar Punal Kaaviri - நிறைந்திருக்கிற தீர்த்தத்தையுடைய திருக்காவேரியாலும் ஆய பொன் மா மதிள் சூழ்ந்து, Aay Pon Maa Mathil Soozhndhu - தகுதியான அழகிய பெரிய திருமதிற்களாலும் சூழப்பட்டு அழகு ஆர், Azhagu Aar - அழகு பொருந்தியிருப்பதான என்றும்சேயன், Endrumseyan - எந்நாளும் எட்டாமலிருப்பவன் மிக பெரியன், Miga Periyan - மஹாபுருஷன்; நுண் நேர்மையன், Nun Naermaiyan - ஸூக்ஷ்மமான பொருள்களிற் காட்டிலும் ஸூக்ஷ்மத்தன்மை வாய்ந்தவன், ஆய, Aay - என்றிப்படி சொல்லக்கூடியதான இ மாயை, I Maayai - இவ்வாச்சரியத்தை அரும் அறியா வகையான், Arum Ariya Vagaiyaan - ஒருவரும் அறியக் கூடாதபடியிருப்பவனான ஸர்வேச்வரனுடைய |