திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1393 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்-இது குடிப் பிறப்புக்கு போராது காண் இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும் காண் அவன் ஸ்த்ரரைணன் காண் -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால் அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள்) 6 | தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே –5-5-6 | பதவுரை Show / Hideதாது ஆடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள், Thaadhu Aadu Vanamaalai Thaarano Enru Enru Thalarndhaal - ‘தாதுக்கள் நிரம்பிய வனமாலையை எனக்குத் தந்தருளமாட்டானோ?’ என்று பலகால் சொல்லி சோர்வடைந்தாள்; (- (என் மகளை செய்தனகள் நான் எங்ஙனம் சொல்லுகேன்?)) யாதாலும் ஒன்று உரைக்கில், Yaadhalum Ondru Uraikkil - (அவளுக்கு அடக்கமுண்டாகும்படி நாம்) ஏதாவதொரு வார்த்தை சொன்னால் (அதற்கு மறுமொழியாக) எம்பெருமான் திரு அரங்கம் என்னும், Emperumaan Thiru Arangam Ennum - ‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்; பூ மேல் மாது ஆளன், Poo Mael Maathu Aalan - பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும் குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும் மதுசூதன், Madhusoodhan - மதுவென்னமசுரனைக் கொன்றவனும் முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன், Munnam Mannarkku Aay Thoodhu Sentra Aalan - முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி |