திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1397 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து ஸ்ரீ பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்) 10 | சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே –5-5-10 | பதவுரை Show / Hideசேல் உகளும் வயல் புடை சூழ் திருஅரங்கத்து அம்மானை, Sel Uhalum Vayal Pudai Soozh Thiruarangathu Ammaanai - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற கழனிகளினால் சுற்றும் சூழப்பட்ட திருவரங்கத்திலுள்ள எம்பெருமானை (- (இஹலோக ஐச்வர்யங்களையநுபவித்துப் பின்பு)) சிந்தை செய்த, Sindhai Seitha - தியானித்துக் கொண்டிருக்கின்ற நீலம் மலர் கண்மடவான் நிறை அழிவை, Neelam Malar Kanmadavaan Nirai Azhivai - கருநெய்தல் போன்ற கண்களை யுடையனான பரகால நாயகியினது அடக்கம் அழிந்தமையைக் குறித்து தாய் மொழிந்த அதனை, Thaai Mozhintha Adhanai - தாய்பேசின பாசுரமாக, நேரார் சாலன், Neraar Saalan - பகைவர்க்கு யமன் போன்ற வரும் வேல், Veel - வேற்படையையுடையரும் பரகாலன், Parakalan - பரகாலனென்ற திருநாமமுடையவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Malai - இச் சொல்மாலையை கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள், மாலை சேர் வெண் குடை கீழ், Malai Ser Ven Kudai Keel - முத்துஸரங்கள் தொங்கவிடப் பெற்ற வெண்குடை நிழலில் மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாயிருந்துகொண்டு போன் உலகில் வாழ்வர், Poon Ulagil Vazhvar - பரமபதத்தில் நித்யாநுபவம் பண்ணப்பெறுவர். |