திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1399 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீஸ்ரீ இந்த லோகங்கள் ஏழையும் தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும் ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே உபகாரம் கொண்டார்க்கு பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படி இருந்தவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 2 | பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2 | பதவுரை Show / Hideபேரானை, Peranai - திருப்பேர் நகரில் உறைபவனும் (- (கண்டது தென் அரங்கத்து)) குறுங்குடி எம் பெருமானை, Kurungudi Em Perumanai - திருக்குறுங்குடியி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமி யானவனும் திருத்தண்காலூரானை, Thiruthankalooranai - திருத்தண்காலில் நித்யவாஸம் பண்ணுமவனும் கரம்பனூர் உத்தமனை, Karambanoor Uthamanai - திருக்கரம்பனூரில் உத்தமனாய் விளங்குபவனும், முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும், Muthu Ilangu Kaar Aar Thin Kadal Ezhum - (உள்ளே) முத்துக்கள் ஒளிவிடாநிற்பனவும் கருநிறம் மிக்கவையும் திடமுள்ளனவுமான ஸப்த ஸமுத்ரங்களையும் ஏழ் மலை, Ezh Malai - ஸப்த குலாசலங்களையும் இ ஏழ் உலகு, I Ezh Ulagu - இவ்வேழுலகங்களையும் (பிரளயகாலத்தில்) உண்டும், Undum - அமுது செய்தும் ஆராது என்று இருந்தானை, Aarathu Endru Irundhaanai - த்ருப்திபெறாதவனாய் இருந்தவனுமான பெருமானை |