திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1400 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும் தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய் அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருக்குமவனை – ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்து ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது என்னும் இன்னாப்போடு அன்றிக்கே இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும் ப்ரீதி பிரகர்ஷத்தோடே பண்டு ஒரு கால் பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய் அதில் புரையற வர்த்தித்தவனை கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 3 | ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-3 | பதவுரை Show / Hideஅன்று, Andru - வராஹகல்பத்தின் தொடக்கத்தில் (- (கண்டது தென் அரங்கத்தே–.)) ஏன் ஆகி உலகு இடந்து, Yen Aagi Ulagu Idanthu - மஹாவராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியை (அண்டபித்தியில் நின்றும் குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்) இரு நிலனும் பெரு விசும்பும் தான் ஆய பெருமானை, Iru Nilanum Peru Vizhumbum Thaan Aaya Perumaanai - விசாலமான மண்ணுலகமும் பரந்த விண்ணுலகமும் தனக்கு உடலாக இருக்கப்பெற்ற ஸ்வாமியாயும், தன் அடியார் மனத்து, Than Adiyaar Manathu - தன் அடியவர்களது நெஞ்சிலே என்றும் தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை, Endrum Then Aagi Amuthu Aagi Thigazhnthaanai - எப்போதும் தேன்போலவும் அமிருதம் போலவும் விளங்குமவனாயும், ஒருகால், Orukaal - முன்பொருகாலத்திலே மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ள முவந்து ஆன் ஆயன் ஆனானை, Aan Aayan Aanaanai - பசுக்களை மேய்க்குமிடையனாய்ப் பிறந்தவனாயுமுள்ள எம்பெருமானை |