திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1402 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1402பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் – அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 5
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின் ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5
பதவுரை Show / Hide
நீர் ஆய் அழல் ஆய் கெடு நிலன் ஆய் நின்றானை, Neer Aay Azhai Aay Kedu Nilan Aay Nindhiraanai - ஜலஸ்வரூபியாம் அக்நிஸ்வரூபியாயும் விசாலமான பூமிஸ்வரூபியாயும் இருப்பவனும், (- (கண்டது தென் அரங்கத்தே–.))
அன்று, Andru - ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த காலத்து
அரக்கன் ஊர், Arakkan Oor - இராவணனுடைய நகரமான இலங்கையை
கண்டார் பின் காணாமே, Kandaar Pin Kaanamae - முன்பு கண்டவர்கள் பின்பு காணவொண்ணாதபடி
அழலால் உண்டானை, Azhalaal Undaanai - அக்நிக்கு இரையாக்கினவனும்,
பேர் அழல் ஆய், Paar Azhai Aay - பெரியபடபாக்னி ஸ்வரூபியும்
பெரு விசும்பு ஆய், Peru Visumbu Aay - பரமபதத்துக்கு நிர்வாஹகனும்
பின், Pin - அதற்குமேலே,
மறையோர் மந்திரத்தின் ஆர் அழலால் உண்டானை, Maraiyore Mandiraththin Aar Azhalaal Undaanai - வைதிக ப்ராஹ்மணர்களினுடைய மந்த்ரபூதமான ஹவிஸ்ஸை அக்நிமுகத்தாலே அமுதுசெய்பவனுமான பெருமாளை