திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1404 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன – ஸ்ரீ திருமாலை – பிராபகத்தில் புருஷகாரமுமாய் பிராப்யத்துக்கு அவனோபாதி இறே இருப்பது – ஸ்ரீ ஸ்ரீ திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவனாய் இருந்து வைத்து இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு தானே வந்து மனசிலே விடாதே பொருந்தி இருக்கிறவனை-தானே அர்த்தியாய் கொண்டு இருக்க-நான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 7 | சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7 | பதவுரை Show / Hideசிந்தனையை, Sindhanaiai - (எனது) மனோரதத்திற்கு விஷயமான விதமும் (- (அப்படியிருந்தும் அவ்விடத்தை விட்டு) (யான கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–.)) தவம் நெறியை, Thavam Neriyai - உபாயமார்க்கமா யிருப்பவனும் திரு மாலை, Thiru Maalai - திருமகள் தொழுதனம் வடமலையை, Vadamalaiyai - திருவேங்கடமலைக்கு நிர்வாஹதனும் வந்து, Vandhu - எழுந்தருளி எனது மனத்து, Enathu Manathu - என்னுடைய நெஞ்சிலே பிரியாது இருந்த, Priyadhu Irundha - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் எழுந்தருளியிருப்பவனும், வரி வண்டு ஆர், Vari Vandu Aar - அழகிய வண்டுகள் படிந்த கொந்து, Kondhu - பூங்கொத்துக்கள் அணைந்த, Anaindha - நெருங்கியிருக்கப்பெற்ற பொழில், Pozhil - சோலைகளையுடைத்தான கோவல், Koval - திருக்கோவலூரில் உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை, Ulaku Alappaan Adi Nimirththa Andhanai - உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான பெருமானை |