திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1407 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1407பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை – மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம்) 10
ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக் காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும் தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே –5-6-10
பதவுரை Show / Hide
ஆ நிரை, Aa Nirai - பசுக்கூட்டங்களை
மருவி மேய்த்த, Maruvi Meyththa - விரும்பி மேய்த்தவனாம்
அணி அரங்கத்து அம்மானை, Ani Arangaththu Ammanaik - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான பெருமானைக் குறித்து,
காமரு சீர் கலி கன்றி ஒலிசெய்த, Kamaru Seer Kali Kandrai Oliseiththa - விரும்பத்தக்க சீர்மையையுடைய திருமங்கையாழ்வார் அருளிச் செய்ததும்
மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிரம்பிய கீர்த்தியையுடையதும்
நா மருவு, Naa Maruvu - நாவுக்குப் பொருந்தியிருப்பதுமான
தமிழ் மாலை நாலிரண்டோடு இரண்டினையும், Tamil Maalai Naalirandodu Irandinaikku - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
தாம் மருவி வல்லார் மேல், Thaam Maruvi Vallar Mel - தாமே விரும்பிக் கற்குமவர்களிடத்து
தீ வினை சாரா, Thee Vinai Saaraa - பாவங்கள் அணுகமாட்டா