திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1407 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை – மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம்) 10 | ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே –5-6-10 | பதவுரை Show / Hideஆ நிரை, Aa Nirai - பசுக்கூட்டங்களை மருவி மேய்த்த, Maruvi Meyththa - விரும்பி மேய்த்தவனாம் அணி அரங்கத்து அம்மானை, Ani Arangaththu Ammanaik - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான பெருமானைக் குறித்து, காமரு சீர் கலி கன்றி ஒலிசெய்த, Kamaru Seer Kali Kandrai Oliseiththa - விரும்பத்தக்க சீர்மையையுடைய திருமங்கையாழ்வார் அருளிச் செய்ததும் மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிரம்பிய கீர்த்தியையுடையதும் நா மருவு, Naa Maruvu - நாவுக்குப் பொருந்தியிருப்பதுமான தமிழ் மாலை நாலிரண்டோடு இரண்டினையும், Tamil Maalai Naalirandodu Irandinaikku - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் தாம் மருவி வல்லார் மேல், Thaam Maruvi Vallar Mel - தாமே விரும்பிக் கற்குமவர்களிடத்து தீ வினை சாரா, Thee Vinai Saaraa - பாவங்கள் அணுகமாட்டா |