திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1412 | பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன் இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம் வந்து கிட்டினால் போக்குகைக்காக இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்) 5 | எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-5 | பதவுரை Show / Hideதானவர், Thaanavar - அசுரர்கள் (- (அரங்கம் மா நகர் அமர்ந்தான்)) நினைந்தால், Ninaindhaal - (இரணியன் பட்ட பாட்டைச் சிந்தித்தார்களாகில் எங்ஙனே உய்வர், Engganey Uivar - எப்படி உயிர்தரித்திருப்பார்கள்!; இரணியன், Iraniyan - ஹிரண்யாஸுரனுடைய பூண் இலங்கு அகலம், Poon Ilangu Akalam - ஆபரணங்கள் விளங்கப்பெற்ற மார்வில் நின்றும் பொங்கு வெம் குருதி, Pongu Vem Kuruthi - பொங்குகின்ற உஷ்ணமான ரத்தமானது பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து, Pon Malai Pilanthu Pozhi Tharum Aruvi Othu - மேருமலையைப் பிளந்து கொண்டு வெள்ளமிடுகின்ற அருவி போன்று இழிய, Izhaiya - பெருகும்படியாக, வெம் கண், Vem Kan - தீக்ஷ்ணமான கண்களையும் வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற பற்களையும் உடையதாய் மா, Maa - பெரிதான ஓர் வெள்ளி விலங்கல், Oor Velli Vilankal - ஒரு வெள்ளிமலையானது விண் உற, Vin Ura - ஆகாசத்தைக்கிட்டி கனல் விழித்து, Kanal Vizhithu - தீவிழிவிழித்து எழுந்தது அங்ஙனே ஒக்க, Ezhunthathu Anggane Okka - எழுந்தால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்டதான அரி உரு ஆனான், Ari Uru Aanaan - நரஸிம்ஹாவதாரமெடுத்தவன் |