திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1414 | பெரிய திருமொழி || (5-7–பண்டை) (திருவரங்கம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதேனுமாக இட்ட தடையைக் கொண்டு ஆழக் கடவ கடல் வழி பட நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள் மிதந்து அணையாக -கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு அடிமை கொண்டு நீர்க் கிளப்பத்தை உடைத்தான கடலை அடைத்தான் –அரங்க மா நகர் அமர்ந்தானே) 7 | சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-7 | பதவுரை Show / Hideசுரி குழல் கனிவாய் திருவினை பிரித்த, Suri Kuzhal Kanivai Thiruvinai Piriththa - சிறந்த கூந்தலையும் கொவ்வைக்கனிபோன்ற அதரத்தையும் உடையளான பிராட்டியை வேறுபடுத்தின (- (கடலைக் கடக்கவேண்டிக் கடலரசனைநோக்கி) (அரங்கம் மா நகர் அமர்ந்தான்–.)) கொடுமையில் கடுவிசை அரக்கன், Kodumaiyil Kadhuvisai Arakkan - கொடுமையில் பெரிய வேகத்தையுடையனான இராவணனுடைய எரி விழித்து இலங்கு மணிமுடி பொடி செய்து, Eri Vizhithu Ilangu Manimudi Podi Seidhu - அக்நிபோன்று விளங்கின மணிகளழுத்தின கிரீடங்களைப் பொடிபடுத்தி இலங்கை, Ilankai - லங்காபுரியை பாழ்படுப்ப, Paazhpaduppa - பாழாக்கி விடவேணுமென்று ஸங்கல்பித்து வரி சிலை வளைய அடு சரம் துரந்து, Vari Silai Valaiya Adu Saram Thurandhu - அழகிய வில்லை வளைத்துக் கொலையம்புகளைப் பிரயோகித்து, (அவ்வளவிலே) மறி கடல் நெறிபட, Mari Kadala Neripada - அலைமடிகின்ற கடல் வழிபட்டு அமைந்திட அரி குலம் பணி கொண்டு அலை கடல் மலையால் அடைத்தான், Ari Kulam Pani Kondu Alai Kadala Malaiyaal Adaiththaan - வாநர ஸமூஹங்கள் கைங்கரியம் செய்யப் பெற்று அலைகடலை மலைகளினால் அணைகட்டின பெருமான் |