திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1418 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1418பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை குறைவாளனை விஷயீ கரியாது ஒழிகிறது என் –என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது – இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால் இவள் வழியே போவான் ஒருவன் இறே – பிராட்டியை தோழி என்றும்-இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை – சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம் சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடக்குமா போலே சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக – ஸ்ரீ ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது உடையவன் ஆகையாலே-உடைமை தேட்டமாய் அன்றோ-இங்கு வந்து சாய்ந்து அருளிற்று) 1
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1
பதவுரை Show / Hide
ஆழி வண்ண, Aazhi Vanna - கடல்வண்ணனே! (- (அக்குஹனை நோக்கி) (நான் அவற்றில் ஈடுபட்டு))
அணிபொழில் திருஅரங்கத்து அம்மானே, Anipozhil Thiruarangathu Ammanae - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது, Ezhaik Aethalan Keel Magan Ennaathu - (இவன்) அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியிற் பிறந்தவன்’ என்று (குஹனுடைய தாழ்வுகளைக்) கருதாமல்
இரங்கி, Irangi - (அவன் மீது) கிருபை பண்ணி (அவனை உயிர்த்தோழனாக அங்கீகரித்து)
மற்று, Mattru - அதற்கு மேலே
அவற்கு, Avarukku - அந்தக் குஹப்பெருமான் விஷயத்தில்
இன் அருள் சுரந்து, In Arul Surandhu - இனிமையான கருணை மேன்மேலும் உண்டாகப்பெற்றவனாய்
மாழை மான் மட நோக்கி, Maazhai Maan Mada Nookki - மானின் பார்வைபோன்ற கபடமற்ற கண் பார்வையை உடையளான என் மனைவியாகிய இந்த ஸீதை
உன் தோழி, Un Thozhi - உனக்குத் தோழியாவாள்;
எம்பி, Embi - என் தம்பியான லக்ஷ்மணன்
உம்பி, Umbi - உன் தம்பியாவன்;
என்று, Endru - என்று சொல்லி
ஒழிந்திலை, Ozhinthilai - இவ்வளவோடு நீவிட்டிடாதவனாய்
உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு
நீ எனக்கு தோழன், Nee Enakku Thozhan - ‘நீ எனக்கு நண்பன்
இங்கு ஒழி, Ingu Ozhi - இங்கே நின்றிடுவாயாக’
என்ற, Endra - என்றும் (நீ ஸ்ரீராமாவதாரத்திற்) சொல்லியருளிய
சொற்கள், Sorkkal - வார்த்தைகள்
வந்து, Vandhu - கர்ணபரம்பரையாய் என் கேள்விக்கு வந்து
அடியேன் மனத்து இருந்திட, Adiyen Manaththu Irundhida - அடியேனுடைய நெஞ்சிலே பொருந்தியிருக்க,
நின் அடி இணை அடைந்தேன், Nin Adi Inai Adaindhen - உனது திருவடிகள் இரண்டையும் சரணமாகப் பற்றினேன்