திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1425 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1425பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைதிக புத்ர இதிகாசத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் – இப்பாட்டிலும் சொல்லுகிறது -கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தை ஆனால் வாசி என் என்னில் தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே-கார்யம் செய்த சக்தி மத்தையைச் சொல்லுகிறது) 8
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-8
பதவுரை Show / Hide
வேதம் வாய் மொழி, Vetham Vay Mozhi - வேதங்களையே வாய்ப்பேச்சாகவுடையவனான (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!;))
அந்தணன் ஒருவன், Andhanan Oruvan - ஒரு வைதிகப்ராமணன் (உன்னை அடுத்து)
எந்தை, Endhai - ‘எமது தலைவனே!
நின் சரண், Nin Saran - உனக்கு அடைக்கலப் பொருளாகிறேன் யான்;
என்னுடை மனைவி, Ennudai Manaivi - எனது மனைவியானவள்
காதல் மக்களை, Kaadhal Makkal - தான் ஆசையுடன் பெறுகின்ற பிள்ளைகளை
பயத்தலும் காணாள், Payaththalam Kaanal - பெற்றவளவிலே காணப்பெறுகின்றாளில்லை;
கடியது ஓர் தெய்வம், Kadiyathu Or Deivam - கொடுந் தன்மையுடையதான ஒரு தெய்வமானது
கொண்டு ஒளிக்கும், Kondhu Olikkum - (அப்பிள்ளைகளைக்) கொண்டு போய் ஒளித்து விடுகின்றது’
என்று, Endru - என்று (தன் குறையைச்) சொல்லி
அழைப்ப, Azhaiyppa - அதற்குப் பரிஹாரம் செய்வதற்கு உன்னை யழைக்க
ஏதலார் முன்னே, Aethalaar Munne - (அவளைப் பரிஹாஸித்துக் கொண்டிருந்த) பகைவர்களது முன்னிலையிலே
அவற்கு, Avarukku - அந்த வைதிகனுக்கு
இன் அருள் செய்து, In Arul Seidhu - இனிமையான கருணையைச் செய்து
இவர் உன் மக்கள் என்று கொடுத்தாய், Ivar Un Makkal Endru Koduththaai - ‘நான் அழைத்துக் கொண்டு வந்த இவர்கள் உன் பிள்ளைகள்’ என்று சொல்லிக் கொணர்ந்து கொடுத்தருளினாய்;
ஆதலால், Adhalal - (இப்படி செயற்கரியன செய்து சரணாகதரக்ஷணம் செய்தருள்பவன் நீ) ஆதலால்