திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1427 | பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவருடைய பாவ வருத்தி இல்லையாகிலும் இவருடைய பாசுரத்தைச் சொல்லவே ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம் என்கிறது) 10 | மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –5-8-10 | பதவுரை Show / Hideமாடம் மாளிகை சூழ், Maadam Maaligai Soozh - உபரிகைகளை யுடைய வீடுகள் எங்கும் நிறைந்திருக்கப்பெற்ற திரு மங்கை, Thiru Mangai - திருமங்கை யென்னும் நாட்டுக்கு மன்னன், Mannan - அரசரும் ஒன்னலர் தங்களை வெல்லும், Onnalaar Thangalai Vellum - பகைவர்களை வெல்லுகின்ற ஆடல் மா, Aadal Maa - ஆட்டத்திற்சிறந்த குதிரையை ஏறிச் செலுத்துதலில் வலவன், Valavan - வல்லவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் அணி பொழில் திரு அரங்கத்து அம்மானை, Ani Pozhil Thiru Arangathu Ammanaai - அழகிய சோலைகள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்திற்பள்ளி கொண்டருள்கின்ற ஸ்வாமியும் தொல், Tol - தொன்றுதொட்டு வருகிற நீடு புகழ், Needu Pugazh - மிக்க கீர்த்தியையுடைய ஆழி, Aazhi - திருவாழியாழ்வானைப் பிரயோகித்தலில் வல்லானை, Vallaanai - வல்லவனும் எந்தையை, Endhaiyai - எமது தலைவனுமான நெடு மாலை, Nedu Maalai - பெருமையையுடைய ஸ்ரீமந்நாராயணனை நினைந்த, Ninaindha - மனத்தினால் அநுபவித்து அருளிச் செய்த இவை பத்து பாடல், Ivai Paththu Paadal - இந்தப் பத்துப் பாசுரங்களையும் தொண்டீர், Thondeer - எம்பெருமானடியார்களே! பாடுமின், Paadumin - நீங்கள் ஓதுங்கள்; பாட, Paada - அங்ஙனம் ஓதவே நும்மிடை பாவம் நில்லா, Nummidai Paavam Nillaa - உங்களித்திற் பாவங்கள் நிற்கமாட்டா. |