திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1428 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1428பெரிய திருமொழி || 1
கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன் பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும் செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர் பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1
பதவுரை Show / Hide
ஐக இலங்கு அழி சங்கன், Aika Ilangu Azhi Sangan - திருக்கையிலே விளங்குகின்ற திருவாழி திருச்சங்கையுடையவனும்
கரு முகில் திரு நிறத்தன், Karum Mukil Thiru Niraththan - காளமேகம்போன்ற திருநிறத்தை யுடையவனும்
பொய் இலன், Poi Ilan - (சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ள வைலக்ஷண்யங்களில்) பொய்யில்லாதவனும்
மெய்யன், Meiyyan - (அந்த வைலக்ஷண்யங்களைத் தன்னடியார்கட்கு) மெய்யே காட்டிக் கொடுப்பவனும்
தன் தாள் அடைவர் ஏல் அடிமை ஆக்கும், Than Thaal Adaivar Ael Adimai Aakkum - (யாராவது) தன் திருவடிகளைப் பணிவாராகில் (அவர்களை) நித்ய கைங்கரிய நிஷ்டராக ஆக்கிக் கொள்பவனும்,
அலர் கமலம் ஓங்கு செய், Alar Kamalam Ongu Sei - மலர்ந்த தாமரைகள் உயர்ந்திருக்கப்பெற்ற கழனிகளையும்
செறி பொழில், Serri Pozhil - அடர்ந்த சோலைகளையும் உடைத்தான
தென் திருப்பேர், Then Thiruppaer - தென்திருப்பேர் நகரில்
பை அரசு அணையான், Pai Arasu Anaithyaan - பரந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனமான பெருமானுடையனுமான பெருமானுடைய
நாமம் நான் பரவி உய்ந்த ஆறு ஏ, Naamam Naan Paravi Uyndha Aaru Ae - திருநாமங்களை நான் சொல்லி உஜ்ஜீவித்தபடி என்னே!.