திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1432 | பெரிய திருமொழி || 5 | வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே –5-9-5 | பதவுரை Show / Hideமுன், Mun - முன்பொருகால் வானோர், Vaanor - தேவதைகள் வக்கரன் வாய் கீண்ட மாயனே என்று, Vakkaran Vaai Keenda Maayane Enru - ‘தந்தவக்ரனடைய வாயைக் கிழித்துப் போட்ட மாயவனே’ என்று (துதித்துக்கொண்டு) புக்கு, Pukku - வந்து சேர்ந்து அரண் தந்தருளாய் என்ன, Aran Thandharulai Enna - ‘(எங்களுக்கு) ரக்ஷை கொடுத்தருளவேணும்’ என்று பிரார்த்திக்க பொன் ஆகத்தானை, Pon Aagaththanai - இரணியாசுரனை, அரி உருவம் ஆகி, Ari Uruvam Aagi - நரஸிம்ஹரூபியாகி நக்கு கிளர்ந்து நகம் இடந்து உகந்த, Nakku Kilarndhu Nakham Idandhu Ugantha - சிரித்து வளர்ச்சியடைந்து நகங்களினால் கிழித்துப்போட்டு திருவுள்ளம் மகிழ்ந்தவனும் சக்கரம் செல்வன், Chakkaram Selvan - திருவாழியாலே அழகு பெற்றவனும்இ தென் பேர் தலைவன், Then Per Thalaivan - தென் திருப்பேர் நகரிலெழுந்தருளி யிருப்பவனுமான பெருமானுடைய தாள் அடைந்து உய்ந்தேன், Thaal Adaindhu Uyndhen - திருவடிகளை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கப்பெற்றேன். |