திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1435 | பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான்) 8 | அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-8 | பதவுரை Show / Hideஅம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய, Am Pon Ar Ulagam Ezhum Ariya - அழகிய பொன்போற் சிறந்த ஏழுலங்களும் அறியும்படியாக ஆய்ப்பாடி தன்னுள், Aaypaadi Thannul - திருவாய்ப்பாடியிலே கொம்பு அன்னார் பின்னை, Kombu Annar Pinnai - வஞ்சிக் கொம்புபோன்ற நப்பின்னைப் பிராட்டியினுடைய கோலம், Kolam - திருமேனியை கூடுதற்கு, Kooduthar - அணைவதற்காக ஏறு, Eru - எருதுகளை கொன்றான், Konraan - கொன்றொழிந்தவனும் செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த, Sem Pon Aar Madiyilgal Soozhntha - செவ்விய பொன்போல் அழகிய திருமதிள்களாலே சூழப்பட்ட தென் திருப் பேருள், Then Thirup Perul - தென் திருப்பேர் நகரில் மேவும், Maevum - பொருந்திவாழ்பவனுமான எம்பிரான், Embiraan - எம்பெருமானுடைய நாமம், Naamam - திருநாமங்களை நாளும், Naalum - நாள்தோறும் ஏத்தி, Aethi - ஸங்கீர்த்தநம்பண்ணி நான் உய்ந்த ஆறு ஏ, Naan Uyndha Aaru Ae - நான் உஜ்ஜீவித்த விதம் என்னே.. |