திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1438 | பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்தராத்மதயா நின்று ரஷகனாம் படி சொல்லி- கண்ணுக்கு இலக்காம்படி வந்து அவதரித்து ரஷகனாம்படி சொல்லி ஒதுங்குவார் அளவு பட்டு இத் தோள் நிழலே மிக்கு இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே) 1 | தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-1 | பதவுரை Show / Hideதீது அது நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவை ஆய், Theethu Adhu Nilathodu Eri Kaalinodu Neer Kezhu Visumbum Avai Aayi - குற்றமற்ற (சிறந்த) பூமியும் அக்நியும் வாயுவும் ஜலமும் சிறந்த ஆகாசமும் ஆகிய பஞ்சபூதங்களுக்கு அந்தராத்மாவாயிருப்பவனும் (- (பின்னையும் ஸமயம் பார்த்து)) மாசு அறு மனத்தினொடு, Maasu Aru Manathinodu - குற்றமற்ற மநஸ்ஸும் உறக்கமொடு, Urakkamodu - உறக்கமும் இறக்கை அவை ஆய, Irakkai Avai Aayi - மரணமும் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும் பெருமான், Perumaan - பெருமை தங்கியவனும் தாய், Thaai - தாயாகிய யசோதைப்பிராட்டி செற, Sera - சீறித் தாம்பெடுக்க உளைந்து, Ulaindhu - அதற்கு நடுங்கிக்கிடந்தும் தயிர் உண்டு, Thayir Undu - தயிரை (த்திருடி) உட்கொண்டு குடம் ஆடு, Kudam Aadu - குடக்கூத்தாடினவனும் தடம் மார்வர், Thadam Marvar - விசாலமான திருமார்வையுடையவனும் தகை சேர், Thakai Ser - அருள் பொருந்தியவனுமான நாதன், Nadhan - ஸ்வாமி உறைகின்ற நகர், Uraikindra Nagar - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருப்பதியாகிய நந்திபுர விண்ணகரம், Nandhipura Vinnakaram - நந்திபுர விண்ணகரத்தை மனமே நண்ணு, Maname Nannu - நெஞ்சே! அடைந்திடுவாயாக, |