திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1447 | பெரிய திருமொழி || (5-10–தீதறு) (திருநந்திபுர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன தேசம் ஆகையாலே இவ்விடம் நமக்கு ஆஸ்ரயநீய ஸ்தலம் என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் சவாசனமாகப் போம்) 10 | நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே –5-10-10 | பதவுரை Show / Hideநறை செய் பொழில் மழை தவழும், Narai Sei Pozhil Mazhai Thavazhum - தேன் மிக்க சோலைகளில் மேகங்கள் வந்து சேரப்பெற்ற நந்திபுரவிண்ணகரம், Nandhipuravin Nagaram - நந்திபுரவிண்ணகர மென்னுந் திருப்பதியை நண்ணி, Nanni - அடைந்து உறையும், Uraiyum - அங்கே நித்யவாஸம் பண்ணுமிடத்து உறை கொள் புகர் ஆழி, Urai Kol Pugar Aazhi - உறையிலிடப்பட்டுத் தேஜஸ்ஸு மிகுந்த திருவாழியையும் சுரி சங்கம், Suri Sangam - வலம்புரிச் சங்கத்தையும் அவை, Avai - மற்றுமுள்ள திவ்யாயுதங்களையும் அம் கை உடையானை, Am Kai Udaiyanai - அழகிய திருக்கையிலுடையனான எம்பெருமானைக் குறித்து, கறை வளரும், Karai Valarum - ரக்தக்கறை மிக்கிருப்பதும் ஒளி சேர், Oli Ser - ஒளிபொருந்தியதுமான வேல், Veel - வேற்படையை வல்ல, Valla - ஆளவல்ல கலியன் ஒலி, Kaliyan Oli - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இவை மாலை, Ivai Maalai - இத்திவ்யப் பிரபந்தத்தினுள் இவை ஐந்தும் ஐந்தும், Ivai Aindhum Aindhum - இப்பத்துப் பாசுரங்களையும் முறையில், Murail - கிரமப்படியே பயில வல, Payila Val - அதிகரிக்கவல்ல அடியவர்கள், Adiyavargal - பக்தர்களுடைய கொடு வினைகள் முழுது, Kodu Vinaigal Muzhuthu - பாவங்களெல்லாம் அகலும், Akalam - நீங்கியொழியும் |