திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1454 | பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரணவம் பர ஸ்வரூபத்தை ஒன்றையும் சொல்லுகிறதோ-ஆத்மவஸ்து ஸ்வரூபத்தையும் சொல்லுகிறதோ -என்றால் இரண்டையும் சொல்லா நின்றது இறே ஆத்மா நம் யுஞ்ஜீத -என்றும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் பிராமணருக்கு தனமான வேதத்தில் இன்னிசை உண்டு ஸ்வர ரூபமான பிரவணம் – அத்தால் பிரதிபாத்யனாய் உள்ளவனே) 7 | உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-7 | பதவுரை Show / Hideஇருக்கு உறும் அந்தணர், Irukku Urum Andhanar - வேதம் வல்லவரான பிராமணர்கள் (- (ஆண்டாய் * * * வேண்டேன்-.)) அமரர்கள், Amarar - தேவதைகளினால் பெருக்க மொடு அமர, Perukka Modu Amara - (தாங்கள்) செல்வம் பெருகி வாழும்படியாக சந்தியின் வாய், Sandhiyin Vaai - ஸந்தியா காலந்தோறும் உருக்குறு நறு நெய் கொண்டு, Urukkuru Naru Ney Kondu - உருக்கின மணம் மிக்க நெய்யைக் கொண்டு ஆர் அழலில், Aar Azhalaal - ஆர்ந்த அக்நியில் நல்கும், Nalkum - ஹோமம் பண்ணுவதற் குறுப்பான இருக்கினில், Irukkiniil - வேதத்திலுள்ள இன் இசை ஆனவனே, In Isai Aanavane - பிரணவத்திற்குப் பிரதிபாத்யனானவனே! |