திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1457 | பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நல்ல சந்தஸ்ஸூக்களை உடைத்தான இவற்றை அப்யசிக்க வல்லார்கள் இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து-அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார்) 10 | பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே –6-1-10 | பதவுரை Show / Hideபூமரு, Poomaru - (எப்போதும்) பூக்கள் பொருந்தி இருக்கப்பெற்ற பொழில், Pozhil - சோலைகளாலே அணி, Ani - அலங்கரிக்கப்பட்ட விண்ணகர் மேல், Vinnagar Mael - திருவிண்ணகர்த் திருப்பதி விஷயமாக, காமரு சீர் கலிகன்றி சொன்ன, Kaamaru Seer Kalikanri Sonna - விரும்பத்தக்க ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷமியை யுடையரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பா மரு தமிழ் இவை, Paa Maru Tamil Ivai - தமிழ் பாசுரங்கள் நிறைந்த இத்திருப்பதிகத்தை பாட வல்லார், Paada Vallar - ஓத வல்லவர்கள் வாமனன், Vaamanan - ஸர்வேச்வரனுடைய அடி இணை, Adi Inai - உபய பாதங்களை மருவுவர், Maruvuvaar - பொருந்தப் பெறுவர். |