திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1457 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1457பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நல்ல சந்தஸ்ஸூக்களை உடைத்தான இவற்றை அப்யசிக்க வல்லார்கள் இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து-அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார்) 10
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை பாட வல்லார் வாமனன் அடி இணை மருவுவரே –6-1-10
பதவுரை Show / Hide
பூமரு, Poomaru - (எப்போதும்) பூக்கள் பொருந்தி இருக்கப்பெற்ற
பொழில், Pozhil - சோலைகளாலே
அணி, Ani - அலங்கரிக்கப்பட்ட
விண்ணகர் மேல், Vinnagar Mael - திருவிண்ணகர்த் திருப்பதி விஷயமாக,
காமரு சீர் கலிகன்றி சொன்ன, Kaamaru Seer Kalikanri Sonna - விரும்பத்தக்க ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷமியை யுடையரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பா மரு தமிழ் இவை, Paa Maru Tamil Ivai - தமிழ் பாசுரங்கள் நிறைந்த இத்திருப்பதிகத்தை
பாட வல்லார், Paada Vallar - ஓத வல்லவர்கள்
வாமனன், Vaamanan - ஸர்வேச்வரனுடைய
அடி இணை, Adi Inai - உபய பாதங்களை
மருவுவர், Maruvuvaar - பொருந்தப் பெறுவர்.