திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1462 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐஸ்வர்யம் பிரத்யஷம் நீர் ஆசைப்படுகிறது அதீந்த்ரம் என்ன ஒண்ணாத படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து நிற்கிறது – கைங்கர்ய சாம்ராஜ்யத்தை தருகைக்கு அன்றோ இந்நிலை) 5 | பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5 | பதவுரை Show / Hideபாண், Paan - இசைப்பாட்டையுடையனவாய் (- (திரு விண்ணகர் மேயவனே!-;)) தேன், Then - தேனைப் பருகுகின்ற வண்டு, Vandu - வண்டுகள் அறையும், Araiym - ரீங்காரம் செய்யப்பெற்ற குழலார்கள், Kuzhalargal - கூந்தலையுடையரான மாதர்கள் பல்லாண்டு இசைப்ப, Pallandu Isaiyappa - மங்களாசாஸணம் பண்ண அரசு ஆகி, Arasu Aagi - அரசர்களாயிருந்து கொண்டு வையம் எல்லாம், Vaiyam Ellam - பூமண்டலம் முழுவதையும் ஆண்டார், Aandaar - ஆட்சிபுரிந்தார்கள், முன் ஆண்டவரே மாண்டார், Mun Aandavare Maandaar - (இப்படி) முன்பு ஆண்டு வந்த அவர்களே மாண்டு போனார்கள், என்று வந்தார், Endru Vandhaar - என்ற சொல்லுக்கு இலக்காய்க்கொண்டு வருகிறார்கள்; அந்தோ, Andho - ஐயோ! மனை வாழ்க்கை தன்னை வேண்டேன், Manai Vaalkkai Thannai Vendein - (இப்படி நிலையற்றதான) ஸம்ஸாரவாழ்க்கையை வெறுத்தவனாய்க்கொண்டு நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னைப் பற்றினேன். |