திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1464 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1464பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னுடைய பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால் தேவர் சீற வேண்டும்படியாய் இருக்கும் நான் சர்வ தோஷ உக்தனாய் இருந்தேன்-நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆனபின்பு -நம்மையும் தன்னையும் பாராதே இவன் நிர்தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே என்று சீறாதே -சீறாமை போராது இத்தை திரு உள்ளத்தே கொண்டு அருள வேணும்- விச்வச நீயனான நீ சந்நிஹிதனாய் இருக்க பயாவஹமான பதார்த்தங்களுக்கு அடிமை செய்து திரிய வேணுமோ) 7
வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக் கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத் தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-7
பதவுரை Show / Hide
எந்தாய், Entay - ஸ்வாமிந்!, (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (மனக்கொள்) (உன் அடைந்தேன்.))
யான், Yan - அடியேன்
வேறு ஆ, Veru A - விலக்ஷணமாக
இரந்தேன், Iranten - யாசிக்கின்றேன்;
வெகுளாது, Veguladu - சீற்றமி்ன்றி
ஐவர், Aivar - பஞ்சேந்திரியங்கள்
அடியேனை, Adiyenai - அடியேனை
ஆறா வெம் நரகத்து, Ara Vem Narakattu - ஓய்வில்லாத கொடிய ஸம்ஸாரநரகத்திலே
இடக் கருதி, Itak Karuti - தள்ள நினைத்து
கூது ஆ, Koothu Aa - என்னைத் தங்களுக்குப் பாகமாகக் கொண்டு
வந்து, Vandhu - என்னைக் கிட்டி
குமைக்க, Kumaikka - ஹிம்ஸிக்க,
குடி விட்டவரை, Kudi Vittavarai - (நீ என்னை நல்வாழிப் படுத்துகைக்காக ஸ்ருஷ்டிகாலத்தில் என்னிடத்தில்) குடியிருக்கச்செய்த அந்த இந்திரியங்களை
தேறாது, Theraadhu - நம்பாமல்