திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1465 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1465பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூவா வானவர்–அகர்ம வச்யராக்கி அவர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்து அவ்வழியாலே அவர்கள் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போர நின்றாய்- பிராதாக்களில் ஒருவன் முடி சூடி வாழா நிற்க-ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோற்றா நின்றது யாய்ற்று – என்னுடைய ஷயத்தை போக்குகைகாக நீயே வந்து சந்நிஹிதனாய் இருக்க நான் பிறருக்கு அடிமை செய்து திரியவோ) 8
தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-8
பதவுரை Show / Hide
தீ வாய், Thee Vaai - நெருப்பையுமிழ்கின்ற வாயையுடைய (- (திரு விண்ணகர் மேயவனே!- ;) (நின் அடைந்தேன்-,))
வல், Val - கொடிய
வினையார், Vinaiyaar - பாவங்கள்
சிறந்தவர் போல், Sirandhavar Pol - பந்துக்கள் போன்று
உடன் நின்று, Udan Nindru - என்னோடு பிரியாமல் கலந்துநின்று
மேவா வெம் நரகத்து இட உற்று, Mevaa Vem Narakaththu Ida Utru - பொருந்தாத கொடிய நரகத்திலே (என்னைத்) தள்ள முயன்று
விரைந்து வந்தார், Viraindhu Vandhaar - வெகுவேகமுடையனவா யிருக்கின்றன
மூவா, Moovaa - கிழத்தனம் முதலிய விகாரங்களற்ற
வானவர்தம் முதல்வா, Vaanavartham Muthalvaa - தேவாதிதேவனே!
மதிகோள் விடுத்த தேவா, Mathikool Vidutha Devaa - சந்திரனுடைய க்ஷயரோகத்தைப் போக்கினதேவனே!