திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1467 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் வல்லார் –அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார்) 10 | தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10 | பதவுரை Show / Hideதேன் ஆர் பூ புறவின், Then Aar Poo Puravin - தேன்நிறைந்த பூக்களை யுடைய சோலைகள் யுடைத்தான திரு விண்ணகர், Thiru Vinnagar - திருவிண்ணகர்த் திருப்பதியிலே மேயவனை, Meyavanai - நித்யவாஸஞ்செய்தருளு மெம்பெருமான் விஷயமாக, வான் ஆரும் மதிள் வயல் சூழ் மங்கையர் கோன், Vaan Aarum Mathil Vayal Soozh Mangaiyar Kon - ஆகாசத்தையளாவியிருக்கிற மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியாய், மருவார், Maruvar - பகைவருடைய ஊன் ஆர், Oon Aar - சரீரங்களிலே புகுவதான வேற்படையையுடையரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamil Malai - இத் தமிழ்ப்பாசுரங்களை வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் கோன் ஆய், Kon Aay - ஸ்ரீவைகுண்ட நிர்வாஹகராய்க் கொண்டு வானவர் தம் கொடி மா நகர், Vaanavar Tham Kodi Maa Nagar - நித்யஸூரிகளுடைய கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட சிறந்ததான ஸ்ரீவைகுண்டத்தை கூடுவர், Kooduvar - அடையப்பெறுவர். |