திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1467 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1467பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தும் வல்லார் –அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார்) 10
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10
பதவுரை Show / Hide
தேன் ஆர் பூ புறவின், Then Aar Poo Puravin - தேன்நிறைந்த பூக்களை யுடைய சோலைகள் யுடைத்தான
திரு விண்ணகர், Thiru Vinnagar - திருவிண்ணகர்த் திருப்பதியிலே
மேயவனை, Meyavanai - நித்யவாஸஞ்செய்தருளு மெம்பெருமான் விஷயமாக,
வான் ஆரும் மதிள் வயல் சூழ் மங்கையர் கோன், Vaan Aarum Mathil Vayal Soozh Mangaiyar Kon - ஆகாசத்தையளாவியிருக்கிற மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கையிலுள்ளார்க்கு ஸ்வாமியாய்,
மருவார், Maruvar - பகைவருடைய
ஊன் ஆர், Oon Aar - சரீரங்களிலே புகுவதான வேற்படையையுடையரான
கலியன், Kaliyan - ஆழ்வார்
ஒலிசெய், Olisei - அருளிச்செய்த
தமிழ் மாலை, Tamil Malai - இத் தமிழ்ப்பாசுரங்களை
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்
கோன் ஆய், Kon Aay - ஸ்ரீவைகுண்ட நிர்வாஹகராய்க் கொண்டு
வானவர் தம் கொடி மா நகர், Vaanavar Tham Kodi Maa Nagar - நித்யஸூரிகளுடைய கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட சிறந்ததான ஸ்ரீவைகுண்டத்தை
கூடுவர், Kooduvar - அடையப்பெறுவர்.