திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1470 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தப்ப ஒண்ணாததைத் தப்பி திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் என் பக்கலில் தயைப் பண்ணி யருள வேணும் -என்கிறார்) 3 | மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே –6-3-3 | பதவுரை Show / Hideகோனே, Kone - ஸ்வாமிந்! குறுங்குடியுள் குழகா, Kurungudiyul Kuzhaga - திருக்குறுங்குடியிலே வந்து கலந்துகொள்ள வரு புனல் சூழ் திரு விண்ணகரானே, Varu Punal Sooz Thiru Vinnakaranne - பெருகுகின்ற தீர்த்தங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! மான் ஏய் நோக்கு நல்லார், Maan Aey Nookku Nallaar - மான் பார்வை போன்ற பார்வையையுடைய மாதர்களது மதி போல் முகத்து உலவும், Mathi Pol Mugaththu Ulavum - சந்திரன் போன்ற முகத்தில் உலாவுகின்ற ஊன் எய் கண் வாளிக்கு, Oon Aey Kann Vaalikku - மாம்ஸமயமான கண்களாகிற பாணத்துக்கு உடைந்து, Udaindhu - அஞ்சி நடுங்கி ஓட்டந்து, Oottandhu - ஓடிவந்து உன் அடைந்தேன், Un Adaindhen - உன்னைச் சரணடைந்தேன் |