திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1472 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1472பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த வருத்தம் உண்டோ என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –எனக்காக வந்து நிற்கிற இடம் ஸ்ரீ திருவிண்ணகர் -என்கிறார்) 5
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான் வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச் செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே –6-3-5
பதவுரை Show / Hide
வற்றா நீள் கடல் சூழ், Vatraa Neel Kadal Sooz - ஒருநாளும் வற்றாத பெரியகடலால் சூழப்பட்ட
இலங்கை, Ilankai - லங்காபுரியில்
இராவணனை, Iravanai - ராவணனை
செற்றாய், Settrai - கொன்றொழித்தவனே!,
கொற்றவனே, Kotravaney - தேவாதிதேவனே!
மற்று ஓர் தெய்வம் எண்ணேன், Mattru Oru Deivam Ennen - வேறொரு தெய்வத்தை நெஞ்சிலும் நினைப்பேனல்லேன்;
எம்பெருமான், Emperumaan - ஸ்வாமிந்!
உன்னை, Unnai - உன்னை
என் மனத்து வைத்து, En Manaththu Vaiththu - எனது நெஞ்சில் இருத்தி
பெற்றேன், Petren - ஒரு பேறுபெற்றேன்;
பெற்றதுவும், Pettrathuvum - அப்படி நான் பெற்ற பேறாவது
பிறவாமை, Piravaamai - இனிப் பிறப்பில்லாமையே.