திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1472 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த வருத்தம் உண்டோ என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –எனக்காக வந்து நிற்கிற இடம் ஸ்ரீ திருவிண்ணகர் -என்கிறார்) 5 | மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே –6-3-5 | பதவுரை Show / Hideவற்றா நீள் கடல் சூழ், Vatraa Neel Kadal Sooz - ஒருநாளும் வற்றாத பெரியகடலால் சூழப்பட்ட இலங்கை, Ilankai - லங்காபுரியில் இராவணனை, Iravanai - ராவணனை செற்றாய், Settrai - கொன்றொழித்தவனே!, கொற்றவனே, Kotravaney - தேவாதிதேவனே! மற்று ஓர் தெய்வம் எண்ணேன், Mattru Oru Deivam Ennen - வேறொரு தெய்வத்தை நெஞ்சிலும் நினைப்பேனல்லேன்; எம்பெருமான், Emperumaan - ஸ்வாமிந்! உன்னை, Unnai - உன்னை என் மனத்து வைத்து, En Manaththu Vaiththu - எனது நெஞ்சில் இருத்தி பெற்றேன், Petren - ஒரு பேறுபெற்றேன்; பெற்றதுவும், Pettrathuvum - அப்படி நான் பெற்ற பேறாவது பிறவாமை, Piravaamai - இனிப் பிறப்பில்லாமையே. |