திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1473 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –-நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் – இவ்வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே – தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயநீயனாக நினைத்து இரேன் – இப்படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய ஸ்ரீ பர தத்வமும் அறியேன்) 6 | மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே –6-3-6 | பதவுரை Show / Hideமை ஒண் கருங்கடலும், Mai On Karungadalum - மை போன்று அழகியதாய்க் கறுத்திருக்கின்ற ஸமுத்ரமும் (- (திரு விண்ணகரானே!- ;)) நிலனும், Nilanum - பூமியும் மணி வரையும், Mani Varaiyum - சிறந்த பர்வதங்களும் செய்ய இரண்டு சுடரும், Seyya Irandu Sudarum - அழகிய சந்த்ர ஸூர்யர்களும் இவை ஆய நின்னை, Ivai Aaya Ninnai - ஆகிய இப்பொருள்களாய் விரிந்துநிற்கிற வுன்னை நெஞ்சில், Nenjil - நெஞ்சினால், உய்யும் வகை, Uyum Vagai - நான் உஜ்ஜீவிக்கும்படி உண்மையால் உணர்ந்தேன், Unmaiyaal Unarnthen - உள்ளபடி தெரிந்து கொண்டேன்! இனி, Ini - இப்படியான பின்பு மற்று, Mattru - இதற்குமேலே பிறிது ஓர் தெய்வம் யாதும் அறியேன், Piridhu Oru Deivam Yaadum Ariyen - எவ்விதமான தேவதாந்தரத்தையும் நினைக்கமாட்டேன். |