திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1476 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1476பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான வைலஷண்யத்தை உடைய என்னை- எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள் என்னை நெருக்காத படி நீ அங்கீ கரித்து அருள வேணும்- நம்பீ-ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ தேவரீர் உடைய பூர்த்தி – தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ) 9
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ மல்லா குடமாடி மதுசூதனே யுலகில் செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே –6-3-9
பதவுரை Show / Hide
மல்லா, Malla - மிடுக்குடையவனே! (- (திரு விண்ணகரானே!))
குடம் ஆடீ, Kudam Aadi - குடக்கூத்தாடினவனே!
மதுசூதனே, Madhusoodhane - மதுவென்னும் அசுரனைக் கொன்றவனே!
உலகில் செல்லா, Ulavil Chella - லோகத்தில் நடையாடாத (அபூர்வமான)
நல் இசையாய், Nal Isaiyai - நல்ல கீர்த்தியை யுடையவனே!.
நம்பீ, Nambi - பரிபூர்ணனே!,
திருமார்பா, Thirumaarpaa - பிராட்டியை மார்வில் உடையவனே!
சொல்லாய், Sollaai - அடியேனுக்கு மறுமொழி கூறியருளவேணும்;
உனக்கு ஆகி, Unakku Aagi - உன்விஷயத்தில்
தொண்டுபட்ட, Thondupatta - அடிமைபூண்ட
நல்லேனை, Nalleinai - விலக்ஷணனானவென்னை
வினைகள் நலியாமை, Vinaigal Naliyamai - பாவங்கள் தொந்தரவு செய்யாதபடி
நம்பு, Nambu - ஆதரித்தருளாய்.