திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1477 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்-இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில் கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்-போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம்) 10 | தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10 | பதவுரை Show / Hideதார் ஆர் மலர், Thaar Aar Malar - இதழ்மிக்க பூக்களையுடைத்தான கமலம் தடம், Kamalam Thadam - தாமரைத் தடாகங்களினால் சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட தண் புறவின், Than Puravin - குளிர்ந்த தோட்டங்களை யுடையதாய் சீர் ஆர் நெடு மறுகில், Seer Aar Nedum Marugil - செல்வம் மிக்க நீண்ட வீதிகளையுடையதான திரு விண்ணகரானை, Thiru Vinnakaranai - திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கிற அப்பன்விஷயமாக, கார் ஆர் புயல் தடக்கை கலியன், Kaar Aar Puyal Thadakkai Kalyan - காளமேகம் போன்று ஔதார்யத்தையுடைய நீண்ட கைகளையுடையரான திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maala - சொல்மாலையாகிய இவை, Ivai - இப்பாசுரங்களை ஆர் ஆர் வல்லார், Ar Ar Vallar - எவரெவர் ஓதுகின்றனரோ, அவர்க்கு, Avarkku - அவரவர்கட்கு அல்லல், Allal - பாவங்கள் நில்லா, Nilla - தங்கமாட்டாமல் ஓடிப்போய்விடும். |