திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1477 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1477பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்-இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில் கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்-போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம்) 10
தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில் சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக் காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10
பதவுரை Show / Hide
தார் ஆர் மலர், Thaar Aar Malar - இதழ்மிக்க பூக்களையுடைத்தான
கமலம் தடம், Kamalam Thadam - தாமரைத் தடாகங்களினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட
தண் புறவின், Than Puravin - குளிர்ந்த தோட்டங்களை யுடையதாய்
சீர் ஆர் நெடு மறுகில், Seer Aar Nedum Marugil - செல்வம் மிக்க நீண்ட வீதிகளையுடையதான
திரு விண்ணகரானை, Thiru Vinnakaranai - திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கிற அப்பன்விஷயமாக,
கார் ஆர் புயல் தடக்கை கலியன், Kaar Aar Puyal Thadakkai Kalyan - காளமேகம் போன்று ஔதார்யத்தையுடைய நீண்ட கைகளையுடையரான திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய
இவை, Ivai - இப்பாசுரங்களை
ஆர் ஆர் வல்லார், Ar Ar Vallar - எவரெவர் ஓதுகின்றனரோ,
அவர்க்கு, Avarkku - அவரவர்கட்கு
அல்லல், Allal - பாவங்கள்
நில்லா, Nilla - தங்கமாட்டாமல் ஓடிப்போய்விடும்.