திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1479 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம்) 2 | கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-2 | பதவுரை Show / Hideகொங்கு உண் குழலார், Kongu Un Kuzhalar - மணம் பொருந்திய கூந்தலை யுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு)) கூடி இருந்து, Koodi Irundhu - கூடு்டமாகத் திரண்டிருந்து சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி நீர் இருமி இங்கு எம்பால் வந்தது என், Neer Irumi Ingu Empaal Vandhadhu En - ‘நீங்கள் இருமிக்கொண்டு இவ்விடத்தில் எங்களிடத்தில் வந்தது எதுக்காக?‘ என்று இகழாத முன், Endru Ikazhatha Mun - என்று திரஸ்கரிப்பதற்கு முன்னே,- திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன், Thingal Eri Kaal Sem Sudar Aayavan - சந்திரனும் அக்நியும் காற்றும் ஸூரியனும் ஆகிய இப்பொருள்களாயிருக்கும் எம்பெருமானுடையதும் தேசு உடை, Desu Udai - தேஜஸ்ஸையுடையதும் நாங்கள், Naangal - நமக்குப் புகலிடமானதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரை |