திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1482 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து ஆக-இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே உத்தேச்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான நன்மையை உடைய தேசத்தை நாம் ஆஸ்ரயிப்போம்) 5 | விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-5 | பதவுரை Show / Hideவிலங்கும், Vilangum - மானையும் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.)) கயலும், Kayalum - மீனையும் வேலும், Velum - வேற்படையும் ஒண் காவியும், On Kaaviyum - அழகிய செங்கழுநீர்ப்பூவையும் வென்ற, Vendru - தோற்கடித்த கண், Kan - கண்களை யுடையரும் சலம் கொண்ட சொல்லார் தாங்கள், Salam Konda Sollaar Thangal - கபடமுள்ள சொற்களை யுடையருமான பெண்கள் சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே,- மலங்கும் வராலும் வாளையும், Malangum Varalum Vaalaiyum - பலவகைப்பட்ட மீன்கள் பாய், Paai - துள்ளி விளையாடுகின்ற வயல், Vayal - கழனிகளாலே சூழ்தரு, Sooltharu - சூழப்பட்டதும் நலம் கொள், Nalam Kol - நன்மைமிக்கதுமான நறையூர், Naraiyoor - திருநறையூரை |