திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1482 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1482பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து ஆக-இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே உத்தேச்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான நன்மையை உடைய தேசத்தை நாம் ஆஸ்ரயிப்போம்) 5
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண் சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன் மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-5
பதவுரை Show / Hide
விலங்கும், Vilangum - மானையும் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.))
கயலும், Kayalum - மீனையும்
வேலும், Velum - வேற்படையும்
ஒண் காவியும், On Kaaviyum - அழகிய செங்கழுநீர்ப்பூவையும்
வென்ற, Vendru - தோற்கடித்த
கண், Kan - கண்களை யுடையரும்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள், Salam Konda Sollaar Thangal - கபடமுள்ள சொற்களை யுடையருமான பெண்கள்
சிரித்து, Siriththu - பரிஹாஸம் பண்ணி
இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே,-
மலங்கும் வராலும் வாளையும், Malangum Varalum Vaalaiyum - பலவகைப்பட்ட மீன்கள்
பாய், Paai - துள்ளி விளையாடுகின்ற
வயல், Vayal - கழனிகளாலே
சூழ்தரு, Sooltharu - சூழப்பட்டதும்
நலம் கொள், Nalam Kol - நன்மைமிக்கதுமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை