திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1483 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் – பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம்) 6 | மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6 | பதவுரை Show / Hideமின் நேர், Min Ner - மின்னல்போன்ற இடையையுடையரான மாதர் (முன்பு வைத்திருந்த) ப்ரீதியை (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு.-)) மாற்றி இருந்து, Maatri Irundhu - தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு நீர், Nir - (கிழவரான) நீங்கள் இருமி, Irumi - இருமிக்கொண்டு எம்பால் வந்தது என் என்று, Embaal Vandhadhu En Endru - ‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று இகழாத முன், Ikazhaadha Mun - திரஸ்கரிப்பதற்கு முன்னே தொல் நீர் இலங்கை, Thol Neer Ilangai - கடல்சூழ்ந்த லங்காபுரி மலங்க, Malanga - வியாகுலப்படும்படி விலங்கு, Vilangu - (அனமானாகிற) வானர வீரனைக்கொண்டு எரி ஊட்டீனான், Eri Oottinaan - தீமூட்டிவிட்ட பெருமானுடையதாய் நல் நீர், Nal Neer - நல்ல தீர்த்தங்களையுடைத்தான நறையூர், Naraiyoor - திருநறையூரை |