திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1485 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1485பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய உத்சவமும் வைதிக சமாராதானமும் என்றும் மாறாத ஊர் – ஸ்ரீ பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல இப் பிரக்ருதியோடே அத்தோடு போலியான ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம்) 8
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக் கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8
பதவுரை Show / Hide
வாள் ஒண், Vaal On - வாள்போன்ற
கண் நல்லார், Kan Nallaar - கண்களையுடைய பெண்கள்
தாங்கள், Thangal - இப்போது இகழும் தாங்களே
மதனன், Madhanan - இவன் மன்மதன்
என்றார், Endraar - என்று சொன்ன
தம்மை, Thammai - ஆண்களைப் பார்த்து
ஈளையோடு, Eelaiyodu - கோழையோடு
ஏங்கு கிழவன், Aengu Kizhavan - ஏங்கும் கிழவன்
கேண்மின்கள், Keenmingal - எங்கே வந்தான் என்று கேளுங்கள்
என்னாத முன், Ennaadha Mun - என்று சொல்வதற்கு முன்
வேள்வும், Velvum - யாகங்களும்
விழவும் வீதியில், Vizhavum Veedhiyil - விழாக்களும் வீதியில்
என்றும் அறாத, Endrum Aradha - என்றும் தினமும்
ஊர் நாளும், Oor Naalum - நிகழும் ஊரான
நறையூர், Naraiyoor - நறையூரை
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்
எழு நெஞ்சமே!, Ezhu Nenjamai - எழுந்திரு மனமே