திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1485 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய உத்சவமும் வைதிக சமாராதானமும் என்றும் மாறாத ஊர் – ஸ்ரீ பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல இப் பிரக்ருதியோடே அத்தோடு போலியான ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம்) 8 | வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8 | பதவுரை Show / Hideவாள் ஒண், Vaal On - வாள்போன்ற கண் நல்லார், Kan Nallaar - கண்களையுடைய பெண்கள் தாங்கள், Thangal - இப்போது இகழும் தாங்களே மதனன், Madhanan - இவன் மன்மதன் என்றார், Endraar - என்று சொன்ன தம்மை, Thammai - ஆண்களைப் பார்த்து ஈளையோடு, Eelaiyodu - கோழையோடு ஏங்கு கிழவன், Aengu Kizhavan - ஏங்கும் கிழவன் கேண்மின்கள், Keenmingal - எங்கே வந்தான் என்று கேளுங்கள் என்னாத முன், Ennaadha Mun - என்று சொல்வதற்கு முன் வேள்வும், Velvum - யாகங்களும் விழவும் வீதியில், Vizhavum Veedhiyil - விழாக்களும் வீதியில் என்றும் அறாத, Endrum Aradha - என்றும் தினமும் ஊர் நாளும், Oor Naalum - நிகழும் ஊரான நறையூர், Naraiyoor - நறையூரை நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம் எழு நெஞ்சமே!, Ezhu Nenjamai - எழுந்திரு மனமே |